2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உணவு பூரண பாதுகாப்பு மற்றும் பாதிப்பு பற்றிய தேசிய மதிப்பீடு - 2019 - இலங்கை - இலங்கையில் உணவு பாதுகாப்பு பற்றிய மதிப்பீட்டு ஆய்வின் சாத்தியத்தகவாய்வினை உறுதிசெய்துகொள்வதற்கு குருநாகல் மாவட்டத்தை தழுவி நடைமுறைப்படுத்தப்படவுள்ள முன்னோடி ஆய்வின் பெறுபேற்றின்மீது சகல தரப்பினர்களினதும் பங்களிப்புடன் உணவு பூரண பாதுகாப்பு மற்றும் பாதிப்பு பற்றிய தேசிய மதிப்பீட்டினை நடைமுறைப்படுத்து வதற்கும் தேசிய உணவு பாதுகாப்பினை உறுதிசெய்வதனை நோக்காக கொண்டு திறமுறைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களை கையாள்வதற்கு உரிய சகல அமைச்சுக்களின் / வரிசை நிறுவனங்களின் சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட தேசிய உணவு பாதுகாப்பு குழுவொன்றை தாபிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |