2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
லங்கா சத்தொச லிமிட்டெட் நிறுவனத்திற்கு நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி என்பவற்றை உள்ளூர் சந்தையில் கொள்வனவு செய்தல் - அரிசி விலை அதிகரிக்கும் போக்கினைக் கட்டுப்படுத்துவதற்காக திறந்த சந்தையில் போதுமான அளவு அரிசியினை பேணும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் ஆகக்குறைந்தது 20,000 மெற்றிக்தொன் (10,000 மெற்றிக்தொன் நாடு மற்றும் 10,000 மெற்றிக்தொன் சம்பா) லங்கா சத்தொச லிமிட்டெட் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட ஆலை உரிமையாளர்கள் அல்லது MARKFED நிறுவனம் மூலம் அரிசியாக்கி லங்கா சத்தொச லிமிட்டெட் நிறுவனத்தின் ஊடாக சந்தைக்கு வழங்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |