• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெருந்தோட்டத் துறை அபிவிருத்
- பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் ஊடாக இலங்கை தேயிலை சபைக்கு 600 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் பெருந்தோட்டத் துறையின் விளைவுப் பெருக்கத்தை துரிதமாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு இந்த நிதியினை பயன்படுத்தி பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிப்பது பற்றி தீர்மானிப்பதற்கு இலங்கை தேயிலை சபைக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்கும் அமைச்சரவை யினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி எற்பாட்டினை பயன்படுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்களின் சமூக நலனோம்பல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களுடைய வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் ஊடாக விளைவு பெருக்க ஊக்குவிப்பு கொடுப்பனவு முறையொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சரினாலும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.