• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலா நோக்கங்களுக்காக குத்தகை அடிப்படையில் புகையிரத பெட்டிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமாக சேவை வழங்குநர்களைப் பெற்றுக் கொள்ளல்
- சுற்றுலா நோக்கங்களுக்காக குத்தகை அடிப்படையில் புகையிரத பெட்டிகளை அபிவிருத்தி செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. இதற்கிணங்க கண்டி பகுதிக்காக சொகுசு பயணிகள் பெட்டிச் சேவை நடைமுறையில் இருந்த போதும் பதுளை, வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய பாதைகள் சார்பில் இந்த சேவை தற்போது நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஆதலால் பயணிகளின் தேவையையும் தற்போதைய கோரிக்கை களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சொகுசு சேவைகள் நடைமுறைப் படுத்தப்படாத இந்த பகுதிகளுக்கு 05 வருட காலப்பகுதிக்குள் சொகுசு பயணிகள் பெட்டிகளை ஈடுபடுத்துவதற்காக போட்டி அடிப்படையில் ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதற்கு கேள்வி கோரும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.