• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை
- உரிய சகல தரப்பினர்களுடனும் உசாவுதலைச் செய்து திருத்தப்பட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையானது தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அமைச்சரவையினால் இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு பாதுகாப்பானதும் வன்முறையற்றதுமான சூழலினை உருவாக்கும் பொருட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை யினால் உரிய தரப்பினர்களுடனும் கலந்துரையாடி தயாரிக்கப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.