2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நெல் தவிர ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கான பசளை மானிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யூரியா (மேலதிக பசளை) இறக்குமதி செய்தல் - அரசாங்க பசளை மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு சார்பில் யூரியா பசளை தேவையானது நெல் செய்கைக்காக 238,200 மெற்றிக்தொன் எனவும் ஏனைய பயிர்ச்செய்கைகளுக்காக 170,000 மெற்றிக்தொன் எனவும் இதற்கு முன்னர் இனங்காணப்பட்டுள்ளது. ஆயினும் 2018 பெரும்போகத்தின் பயிர்ச்செய்கைக்கு ஒருங்கிணைவாக 2019 பெரும்போகத்தில் பயிர்ச்செய்கையானது அதிகரிப்பதற்கு பெரும்பாலும் சாத்தியமுள்ளதென அவதானிக்கப்பட்டுள்ளமையினால் நாட்டில் யூரியா பசளை பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு எதிர்வரும் சில மாதங்களுக்கு நெல் தவிர ஏனைய பயிர்ச் செய்கைகளுக்குத் தேவையான மேலதிக யூரியா பசளை 15,000 மெற்றிக்தொன் இறக்குமதி செய்யும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |