2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கல்தொட்டை பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியையும் கட்டடங்களையும் இலங்கை பொலிசுக்கு உடைமையாக்குதல் - 30 வருட காலத்திற்கு மேலாக இலங்கை பொலிசினால் பயன்படுத்தப்பட்ட பலாங்கொடை பிரதேச செயலக பிரிவில் கல்தொட்டை கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணித் துண்டையும் அதில் அமைந்துள்ள கட்டடங்களையும் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு உடைமையாக்கும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |