• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்காக அரசாங்க காணிகளை நீண்டகால குத்தகை அடிப்படையில் உடைமையாக்கிக் கொள்ளல்
- நாட்டில் மரமுந்திரிகை செய்கைக்கு பாரிய தேவை நிலவுகின்ற மையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 479 ஏக்கர்களைக் கொண்ட புனரீன் தோட்டம், மன்னார் மாவட்டத்தில் 6,498 ஏக்கர்களைக் கொண்ட கொண்டச்சி தோட்டம் மற்றும் 500 ஏக்கர்களைக் கொண்ட வௌ்ளங்குளம் தோட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,075 ஏக்கர் களைக் கொண்ட மாங்கேணித் தோட்டம், திருகோணமலை மாவட்டத்தில் 681 ஏக்கர்களைக் கொண்ட திரியாய தோட்டம் உட்பட புத்தளம் மாவட்டத்தில் 441 ஏக்கர்களைக் கொண்ட எலுவங்குளம் மார்ட்டின் இப்பில் இப்பில் தோட்டம் அமைந்துள்ள காணி ஆகிய அரசாங்க காணிகளை மரமுந்திரிகை செய்கைக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.