2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிலைபேறுடைய நுகர்வு மற்றும் உற்பத்தி தொடர்பான தேசிய கொள்கை - சுற்றாடலை பாதுகாத்து இயற்கை வளங்களை நிலைபேறுடையதாக முகாமித்து குறைந்த வளங்களை பயன்படுத்தி கூடிய உற்பத்திகளை பெற்றுக் கொண்டு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக நலனோம்பலை விருத்தி செய்வது நிலைபேறுடைய நுகர்வு மற்றும் உற்பத்தியின் நோக்கமாகும். நிலைபேறற்ற அபிவிருத்தியின் பாதகமான தாக்கங்களை அவதானித்து இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துடன் இணைந்து நிலைபேறுடைய நுகர்வு மற்றும் உற்பத்தி தொடர்பான சமவாயங்கள் பலவற்றுக்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, நிலைபேறுடைய நுகர்வு மற்றும் உற்பத்தி நோக்கங்களை அடைவதற்காக நடைமுறைப்படுத்தும் பொருட்டு தயாரிக்கப்பட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலைபேறுடைய நுகர்வு மற்றும் உற்பத்தி தொடர்பான தேசிய கொள்கைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |