2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறுவர்களை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை தாபித்தல் - பல்வேறுபட்ட காரணங்களினால் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகியுள்ள சிறுவர்களுக்கு சரியான வழிகாட்டல், பாதுகாப்பு மற்றும் தேவையான வளங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் "சிறுவர்களை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியம்" என்னும் நம்பிக்கை பொறுப்பு நிதியமானது அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைவாக 2019 ஒக்ரோபர் மாதம் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. உலக சிறுவர் தினத்தன்று நன்கொடையாளர்கள் இந்த நிதியத்திற்கு 17 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியத்தை பலப்படுத்துவதற்கு சுயமாக பங்களிப்பு நல்க விரும்பும் அமைச்சரவை உறுப்பினர்களின், பாராளுமன்ற உறுப்பினர்களின், பாராளுமன்ற பணியாட்டொகுதியினரின் மற்றும் அரசாங்க ஊழியர்களின் அரச கூட்டுத்தாபனங்களை சேர்ந்த ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை இந்த நிதியத்திற்கு நன்கொடையாக பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |