• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொது படுகடன் முகாமைத்துவ பணியகமொன்றினைத் தாபித்தல்
- இலங்கையில் கடன் முகாமைத்துவம் சம்பந்தமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளதோடு, இந்த நோக்கத்திற்காக தனி நிறுவனமொன்று இருக்க வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க அரசாங்க கடன்களை முகாமிப்பதற்காக பொது படுகடன் முகாமைத்துவ பணியகம் என்னும் பெயரில் நிறுவனமொன்றை நிதி அமைச்சின் கீழ் தாபிப்பதற்கு கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்குவதற்கும் பொது படுகடன் முகாமைத்துவ சட்டமூலமொன்றை வரைவதற்கும் உத்தேச பணியகத்தைத் தாபிப்பதற்கு நிறுவன கட்டமைப்பொன்றை அபிவிருத்தி செய்வதற்குமாக திறைசேரி செயலாளரின் தலைமையில் ஐவர் அடங்கிய பொது படுகடன் முகாமைத்துவ குழுவொன்றைத் தாபிப்பதற்கும் இந்த நோக்கத்திற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளை கோருவதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.