• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத் துறை வினைத்திறனை மேம்படுத்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் மீள் கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து 25 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளல்
- e-அரசாங்க பெறுகை முறைமை, அரசாங்க நிதி முகாமைத்துவ தகவல் முறைமை மற்றும் மதுவரி வருமான முகாமைத்துவ முறைமை என்பவற்றை பிரதான தகவல் முறைமைகளாக அறிமுகப்படுத்தி, மத்திய அரசாங்கத்தினதும் அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவத்தினதும் வௌிப் படைத்தன்மை மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட்டாக அரசாங்கத் துறைசார் வினைத்திறனை மேம்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்து திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காக சிறந்த நலன்களைக் கொண்ட ஒருசில நிபந்தனைகளுடனான 25.0 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையானது குறித்த கடன் தொகையின் நிதி தாக்கம் சம்பந்தமாக இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கருத்துக்களை பெற்றுக் கொண்டு உலக வங்கியின் மீள் கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக இந்த வங்கியுடன் நிதி உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கு இயலுமாகும் வகையில் நிதி அமைச்சுக்கு அதிகாரத்தினை கையளிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.