2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு சட்டத்தை திருத்துதல் - 2011 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் இதுவரை 63 பில்லியன் ரூபா பெறுமதியான 495 மேன்முறையீடுகள் இருக்கின்றமையினால் இந்த மேன்முறையீடுகளைத் தீர்த்து வைப்பதற்கான நிதிச் சபையின் எண்ணிக்கையை அதிகரிப்பது பொருத்தமானதென இனங்காணப் பட்டுள்ளது. ஆயினும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் நிதிச் சபையின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாமை, ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உயர் நீதிமன்றத்தின் அல்லது மேன்முறை யீட்டு நீதிமன்றத்தின் இளைப்பாறிய நீதியரசர்களின் சேவையை பெற்றுக் கொள்வதில் நிலவுகின்ற சிரமங்கள் என்பன காரணமாக இதன் பொருட்டு தடைகள் உருவாகியுள்ளமையினால் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்பதிலிருந்து பன்னிரெண்டாக அதிகரிப்பதற்கும் நியமிக்கப்பட வேண்டிய நிதிச் சபையின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து நான்காக அதிகரிப்பதற்கும் பன்னிரெண்டு உறுப்பினர்களில் நால்வர் இலங்கை உயர் நீதிமன்றத்தின், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அல்லது மேல் நீதிமன்றத்தின் இளைப்பாறிய நீதிபதிகளிலிருந்து அல்லது சட்டமா அதிபர் திணைக்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் அல்லது அதற்கு மேலான பதவியினை வகித்து ஓய்வுபெற்ற சிரேட்ட உத்தியோகத்தர்களி லிருந்து நியமிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிப்பீடுகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு அல்லது விசாரணை செய்வதற்கு வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லாமையினாலும் இதன் பொருட்டும் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி வரி மேன்முறையீட்டு ஆணைக்குழு சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |