2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காப்பு வரி வகைகளை ஒழுங்குறுத்துதல் - அரசாங்கத்தின் வருடாந்த வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கும் இறக்குமதியினால் உருவாகும் போட்டிகரமான நிலைமையிலிருந்து உள்நாட்டு உற்பத்திகளை பாதுகாப்பதற்குமாக விதித்துரைக்கப்பட்ட விசேட வர்த்தக பொருள் வரி, துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் அபிவிருத்தி வரி, செஸ் வரி அடங்கலாக தீர்வை வரியல்லாத வரிகள் காரணமாக வாழ்க்கைச்செலவு அதிகரித்து செல்வதும் உள்நாட்டு உற்பத்திகளுக்கு பொருளாதார ரீதியிலான போட்டிகரமான நிலை குறைவடைவதன் காரணமாக அவற்றின் பயன் மற்றும் வினைத்திறன் குறைவடைந்துள்ளது. குறித்த வரிகள் சர்வதேச வர்த்தகத்திற்கு தடையாக கருதப்படுவதோடு, உண்மையில் பொருளாதாரத்தில் சிறந்த பயனுள்ள துறைகளுக்கான முதலீடுகளுக்கு தடையாக உள்ளது. ஆதலால் உண்மையாகவே பாதுகாப்பு வழங்கப்படவேண்டிய உற்பத்திகள் மற்றும் கைத்தொழில்கள் பாதுகாக்கபடுகின்றதென்பதை உறுதிப்படுத்திக் கொள்வதோடு முறையாக குறித்த வரிகளை கட்டம் கட்டமாக நீக்குவதற்காக ஐந்து (2020 - 2024) வருட கால திறமுறைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. உற்பத்தி செலவுக்கு குறைந்த விலையில் நாட்டிற்குள் பொருட்கள் உள்வருவதை தடுப்பதற்காக விதித்துரைக்கப்பட்டுள்ள எதிர்நிலையான மற்றும் பாதிப்புகளை குறைப்பதற்கான தீர்வைகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் உள்நாட்டு கைத்தொழில்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். |