2019-10-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வனசீவராசிகள் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை முடிவுறுத்துத - நம்பிக்கை பெறுப்பு கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தாபிக்கப்பட்டுள்ள வனசீவராசிகள் நம்பிக்கை பொறுப்பு நிதியமானது சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்பு என்பவற்றுக்குரியதாக தற்போது செய்றபாடுகள் எதிலும் ஈடுபடாததோடு, 02/2018 ஆம் இலக்க அரசாங்க நிதிச் சுற்றறிக்கைக்கு அமைவாக முடிவுறுத்துவதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இதனை முடிவுறுத்தியதன் பின்னர் அதற்குச் சொந்தமாகவிருந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் யாவற்றையும் வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கையளிப்பதற்கும் சேவையிலிருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள அதன் பணியாட்டொகுதியினருக்கு நட்டஈடும் பணிக்கொடைத் தொகையும் வழங்குவதற்கும் நட்டஈடு பெற்றுக் கொண்டு சேவையிலிருந்து விலகுவதற்கு விருப்பம் தெரிவிக்காத அதன் பணியாட்டொகுதியினரை தனிவேறான அடிப்படையில் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைப்பதற்கும் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்குச் சொந்தமான ரந்தெனிகல பயிற்சி நிலையத்தை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் பயிற்சி நிலையமொன்றாக தொடர்ந்தும் பேணிச் செல்வதற்குமாக சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |