2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
'தரு சம்பத்த' என்னும் பெயரில் லொத்தர் சீட்டொன்றை ஆரம்பித்தலும் அதன் வருமானத்தை 'பிள்ளைகளை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு' வரவு வைத்தலும் - நிர்க்கதியான பிள்ளைகள் மற்றும் விசேட திறமையுள்ள பிள்ளைகளின் நலனோம்பல் உட்பட அவர்களின் எதிர்கால பாதுகாப்பு சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் சம்பந்தமாக செயலாற்றுவதற்கு 2019 ஒப்ரோபர் மாதம் 01 ஆம் திகதி சருவதேச சிறுவர் தினத்தில் நம்பிக்கை பொறுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 'பிள்ளைகளை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை' முறையாக விருத்தி செய்யவேண்டியுள்ளது. ஆதலால், வாரம் ஒருமுறை சீட்டிழுக்கப்படும் லொத்தர் ஒன்றாக 'தரு சம்பத்த' என்னும் பெயரில் லொத்தர் சீட்டொன்றை தேசிய லொத்தர் சபையினால் விற்பனை செய்து இந்த லொத்தர் சீட்டுக்கான செலவினை ஈடு செய்ததன் பின்னர் மேலதிக தொகையினை மாதம் ஒரு தடவை 'பிள்ளைகளை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு' வரவு வைப்பதற்கு நிதி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |