2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொழில் புள்ளி விபரவியலாளர்கள் பற்றிய 19 ஆவது சருவதேச மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட புதிய தொழிற்படை நியமங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் சாத்தியம் தொடர்பிலான முன்னோடி ஆய்வொன்றை மேற்கொள்தல் - தொழில் புள்ளி விபரவியலாளர்கள் பற்றிய 19 ஆவது சருவதேச மாநாட்டில் உத்தியோகபூர்வ தொழிற்படை நியமங்களை தயாரிப்பதற்காக நிலவிய தரங்களுக்கு திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டதோடு, இந்த நியமங்கள் சருவதேச தொழிற்படை நியமங்களாக சருவதேச தொழில் அமைப்பின் கட்டுப்பாட்டுச் சபையினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இதற்கிணங்க, உலக வங்கியின் நிதி கொடையாக கிடைக்கப் பெறும் 212,000.00 ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் ஊடாக சருவதேச தொழில் அமைப்பினதும் உலக வங்கியினதும் தொழினுட்ப ஒத்துழைப்பின் மீதும் புதிய தொழிற்படை நியமங்களுக்கான தரங்களை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் பற்றி முன்னோடி ஆய்வொன்றை மேற்கொள்ளும் பொருட்டு பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |