2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அதிவேக அஞ்சல் சேவை (EMS) தொடர்பிலான ஆசிய பசுபிக் வலய வருடாந்த மாநாடு - 2019 ஆம் ஆண்டில் சருவதேச அதிவேக அஞ்சல் சேவை (EMS) தொடர்பிலான ஆசிய பசுபிக் வலய வருடாந்த மாநாட்டினை இலங்கையில் நடாத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக உத்தேச மாநாட்டில் பங்குபற்றும் பிரதிநிதிகளின் பங்களிப்பு குறையலாமென்பதனால், அதனை இதே ஆண்டில் வேறொரு நாட்டில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆதலால், மேற்போந்த வருடாந்த மாநாட்டை 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவதற்கான சாத்தியம் இல்லையென்பது பற்றி அமைச்சரவைக்கு அறிவிப்பதற்கும் இந்த வருடாந்த மாநாட்டை 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துவதற்காக அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |