2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கம்பஹா 'சியத்த' ஈரவலய பூங்கா நிர்மாணிப்பு - 'சுக்கித்த புரவர' நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யக்கல - கம்பஹா வீதியின் பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள சுமார் 16 ஹெக்டயார் விஸ்தீரணம் கொண்டதும் கைவிடப்பட்டதுமான வயற்காணிகளை கமநல அபிவிருத்தி திணைக்களம் அடங்கலாக ஏனைய உரிய நிறுவனங்களின் அங்கீகாரத்தின் மீது சுற்றாடல் மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகள் உள்வாங்கப்பட்ட ஈரவலயப்பூங்காவொன்றாக அபிவிருத்தி செய்யும் பொருட்டும் கருத்திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணியின் 10 சதவீதம் இந்த கருத்திட்டம் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு ஆகக்குறைந்தது 06 பேர்ச்சர்ஸ்களை கருத்திட்டத்தின் ஊடாக குறித்தொதுக்கும் பொருட்டும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |