• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொறுப்பு முகாமைத்துவ பணிகளை நடைமுறைப்படுத்துதல்
- 2019 செப்ரெம்பர் 03ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் பொறுப்பு முகாமைத்துவ சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட கடன் எடுத்தல் எல்லைகளுக்குள் எதிர்காலத்தில் அரசாங்க கடன்களை மீளச் செலுத்துவதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபையின் சிபாரிசின் பிரகாரம் சர்வதேச ஒத்துழைப்பிற்கான யப்பான் வங்கியின் ஊடாக வழங்கப்படவுள்ள கடன் பிணையுடனான 500 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் (60 பில்லியன் யப்பான் யென்) பெறுமதி கொண்ட 10 வருட முதிர்ச்சிக் காலத்துடன் சமுராய் பிணைமுறிகளை வழங்கும் பொருட்டும் இந்த வழங்கலுக்கு Mizuho Securities Company Ltd., SMBC Nikko Securities Inc. மற்றும் Mitsubishi UFJ Morgan Stanley Securities Co. Ltd. ஆகிய 03 நிறுவனங்களையும் முன்னோடி ஏற்பாட்டாளர்களாக நியமிக்கும் பொருட்டும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.