• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொடர்புபட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் அறிக்கை
- நிதி அமைச்சர் தலைமைத்தாங்கும் அமைச்சர்கள் குழுவொன்று, அரச துறையில் இடம்பெற்றுவரும் தொழிற்சங்க வேலைநிறுத்தங்கள் சம்பந்தமாக அரசாங்கத்தினால் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கையினை ஆராய்ந்து அமைச்சரவைக்குச் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு 2019‑09‑27 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அதன் விசேட கூட்டத்தில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டது. அதற்கிணங்க சேவைக்காலப்பகுதியின் அடிப்படையில் நிறைவேற்றுப் படிக்கு உரித்துடைய இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக சகல உத்தியோகத்தர்களுக்கும் செலுத்தப்படும் 3,000/- ரூபாவிலிருந்து 15,000/- ரூபா வரையான வீச்சினைக் கொண்ட அத்தகைய படியை சேவைக்காலத்தை கருத்திற்கொள்ளாமல் பொதுவாக 15,000/- ரூபாவாக திருத்துவதற்கும் நியாயமான சம்பள அளவுத்திட்டங்களுடன்கூடிய பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றை தயாரிக்கும் குறிக்கோளுடன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவைகளை திணைக்கள சேவையொன்றாக ஆக்குவதற்கும் பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கென அதேபோன்று புகையிரத சேவையினை திணைக்கள சேவையொன்றாக ஆக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் கூறப்பட்ட அமைச்சர்கள் குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.