2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இடைக்கால கணக்கு - 2020 - அடுத்த சனாதிபதி தேர்தல் 2019 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று நடாத்தப்படுவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள படியால், 2019‑08‑13 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கிணங்க, 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படும் வரை, 2020 ஆம் ஆண்டு சனவரி 01 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 30 ஆம் திகதிவரையான முதல் நான்கு மாதங்களுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளை பேணுவதற்கு தேவைப்படும் நிதி ஏற்பாடுகளை உள்ளடக்கி தயாரிக்கப்படும் இடைக்கால கணக்கொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |