2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்தில் கிடைக்கக்கூடியதாகவுள்ள பெற்றோலியத் தரவுகளை விலையிடல் / மீள் விலையிடல் - பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகமானது, எதிர்கால உரிமமளிப்பு சுற்றுக்களை மேற்கொள்ளும் பொருட்டு மன்னார் படுகையின் M2 Block இல் புதிதாக பெற்றுக் கொள்ளப்பட்ட பெற்றோலியத் தரவுகளை விலையிடவும் அத்துடன் மன்னார், காவேரி மற்றும் இலங்கை படுகைகளில் கிடைக்கக்கூடிய தாகவுள்ள ஏனைய பழைய தரவுகளை மீள் விலையிடவும் வேண்டியுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்தில் கிடைக்கக்கூடியதாகவுள்ள பெற்றோலியத் தரவுகளை விலையிடு வதற்கும் மீள் விலையிடுவதற்கும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |