• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையிலுள்ள தொல்பொருளியல் கலைப்பொருட்களை பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு உரித்தாக்குவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை இற்றைப்படுத்துதல்
- இலங்கையில் வரலாற்று மற்றும் தொல்பொருளியல் முக்கியத்துவத்தைக் கொண்ட கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருளியல் தளங்கள் அத்துடன் நினைவுச் சின்னங்கள் என்பவற்றை சிறப்பாக பேணும் குறிக்கோளுடன் 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டம் சட்டமாக்கப்பட்டுள்ளது. கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் 47 ஆம் பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு ஏற்ப, 1940 திசெம்பர் 23 ஆம் திகதிய 8698 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை தற்கால போக்குகளுடன் பொருந்தச் செய்யும் பொருட்டு இற்றைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கிணங்க, 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை திருத்துவதற்கும் அத்துடன் திருத்தங்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர், அவற்றை நடைமுறைப்படுத்து வதற்கும் அதன் பின்னர், அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.