• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அனர்த்த அபாய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற உறுதியான பொருத்து வீடுகளை நிருமாணித்த
- அனர்த்த அபாய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற உறுதியான பொருத்து வீடுகளை நிருமாணித்தல் தொடர்பான கருத்திட்டத்தின் 01 ஆம் கட்டத்தின் கீழ் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 400 வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளது. தற்போது வரை, பதுளை மாவட்டத்திலுள்ள 500 குடும்பங்களையும் பதுளை மாவட்டத்தின் மாவட்ட எல்லைக்கு மிகச் சமீபமாகவுள்ள மொனராகலை மாவட்டத்தில் 50 குடும்பங்களையும் மீள்குடியேற்றுவதற்கு காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. அதற்கிணங்க, இக்கருத்திட்டத்தின் 01 ஆம் கட்டத்தின் 02 ஆம் நிலையின் கீழ் கூறப்பட்ட 550 குடும்பங்களை மீள் குடியேற்றும் குறிக்கோளுடன் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் முதலில் 100 வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டு பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.