2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புதிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தாபித்தல், தற்போது தாபிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளை வர்த்தமானியில் பிரசுரித்தல் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தாபித்தல் மற்றும் மீளமைத்தல் தொடர்பில் எல்லை நிர்ணயக் குழுவொன்றை நியமித்த - புதிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தாபித்தல், தற்போது தாபிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளை வர்த்தமானியில் பிரசுரித்தல் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தாபித்தல் மற்றும் மீளமைத்தல் தொடர்பிலான எல்லை நிர்ணயக் குழுவொன்று ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை நியமிக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கிணங்க, அமைச்சொன்றின் இளைப்பாறிய செயலாளர் ஒருவரின் தலைமைத்துவத்தின் கீழ் பதினொரு உறுப்பினர்களை உள்ளடக்கி புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |