2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்த) சட்டமூலம் - இலங்கையில் காணி கொள்வனவு செய்வது சம்பந்தமாக விதிக்கப்பட்டிருந்த தடையை கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் அட்டவணைப் படுத்தப்பட்ட கம்பனிகளுக்கு ஏற்புடைத்தாக்காமல் இருப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கி 2014 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |