2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணியற்ற நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள வர்களுக்கு வீடுகளை வழங்குத - யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள அத்துடன் காணியற்ற வர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள 535 குடும்பங்களில் 250 குடும்பங்களுக்கு நன்கொடையாளர் ஒருவரினால் கொள்வனவு செய்யப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள சுமார் 7.5 ஏக்கர் விஸ்தீரணமுடைய யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 88 ஆம் இலக்க கிராம உத்தியோகத்தர் பிரிவின் புதிய சோனக வீதியில் வண்ணார் பண்ணையில் அமைந்துள்ள இராசலி குளக்கரை என்னும் தனியார் காணித்துண்டில் இரண்டுமாடி தொடர் வீட்டுத் தொகுதிகளை வீட்டு அலகொன்று 600 சதுர அடி வீதமான 250 வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |