• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய மட்ட கமத்தொழில் சங்கிலி பெறுமதி அபிவிருத்தி கருத்திட்டங் களுடன் சம்பந்தப்பட்ட பொது வசதிகளை மேம்படுத்துதல் - சிறு கமத்தொழில் பங்குடமை நிகழ்ச்சித்திட்ட
- இலங்கை அரசாங்கம், கமத்தொழில் அபிவிருத்திக்கான சருவதேச நிதியம், தனியார்துறை, பங்களிப்பு நிதி நிறுவனங்கள் மற்றும் பயனாளிகள் ஒருங்கிணைந்து 105 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட முதலீட்டின் மூலம் அரசாங்க, தனியார் மற்றும் உற்பத்தியாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப் படும் கமத்தொழில் சங்கிலி பெறுமதி மூலம் விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்குவதற்காக சிறு கமத்தொழில் வர்த்தக பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. இந்த சங்கிலி பெறுமதி அவிருத்தி கருத்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துதல், அதற்கமைவாக விவசாயிகளின் வருமான நிலைமையை மேம்படுத்துதல் மற்றும் சந்தை பாதிப்புகளைக் குறைத்தல் என்பன பொருட்டு தேவையென இனங்காணப்பட்டுள்ளதும் விவசாயப் பிரதேசத்திற்குப் புறம்பாக அமைந்துள்ள சிறிய அளவிலான பொது வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தக் கருத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாய உற்பத்திக் குழுக்களுக்கு / அமைப்புகளுக்கு சங்கிலி பெறுமதி கருத்திட்ட மொன்று சார்பில் ஐந்து மில்லியன் ரூபா என்னும் உச்சத்தில் பொருள் ரீதியான அல்லது நிதி ரீதியான கொடைகளை சிறு கமத்தொழில் பங்குடமை நிகழ்ச்சித்திட்டம் மூலம் வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை கமத்தொழில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சுடனும் ஏனைய உரிய அமைச்சுக்களுடனும் இணைந்து செயற்படுத்துவத்றகு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.