• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலிமுகத்திடலை அபிவிருத்தி செய்தல்
- இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபையானது அதன் சொந்த நிதியங்களுடனும் தேசிய வரவுசெலவுத்திட்ட நிதியங்களுடனும் சேர்த்து 2007 ஆம் ஆண்டில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கூட்டுரிமை மற்றும் சமூகப் பொறுப்பு நிதியங்களைக் கொண்டு காலிமுகத்திடலில் சில அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கிணங்க, 2019/2021 ஆண்டு சார்பில் பிரேரிக்கப்பட்ட கூட்டுரிமை மற்றும் சமூகப் பொறுப்பு வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் மொத்த மதிப்பிடப்பட்ட செலவாகவுள்ள 300 மில்லியன் ரூபா கொண்ட தொகையினை குறித்தொதுக்குவதற்கும் ஏறத்தாழ 18 மாத காலப்பகுதிக்குள் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செயற்பாடுகளை பூர்த்தி செய்வதற்கும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.