2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தினை விரிவுபடுத்துத - நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் நீடிப்பொன்றாக புதிய மின் நிலையமொன்றை நிர்மாணித்தலானது அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் எதிர்கால மின்சார உற்பத்தி கட்டமைப்பு தொடர்பிலான கொள்கைக்கும் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வினால் 2018 - 2037 சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நீண்டகால மின்சார உற்பத்தி திட்டத்திற்கு அமைவானதெனவும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு 300 மெகா வொட் ஆற்றலுடைய 04 மின் நிலையங்களை நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் நீடிப்புகளாக இந்த மனையிடத்தின் உள்ளேயே நிர்மாணிக்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |