• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2016 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேசிய ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பள சட்டத்தைத் திருத்துதல்
- 2016 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேசிய ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பள சட்டத்திற்கு அமைவாக 2016 சனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து செயல்வலுவுக்கு வரத்தக்கதாக 10,000/- ரூபாவைக் கொண்ட (400/- X 25) ஆகக்குறைந்த மாதாந்த சம்பளமும் 400/- ரூபாவைக் கொண்ட (50/- X 8) ஆகக்குறைந்த நாளாந்த சம்பளமும் விதித்துரைக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் வாழ்க்கைச்செலவினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த மாதாந்த சம்பளமான 10,000/- ரூபாவை 12,500/- வரை அதாவது 2,500/- ரூபாவாலும் ஆகக்குறைந்த நாளாந்த சம்பளமான 400/- ரூபாவை 500/- வரை அதாவது 100/- ரூபாவாலும் அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் மேற்போந்த சட்டத்தின் 3 ஆம் பிரிவைத் திருத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2016 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேசிய ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பள சட்டத்தின் 3 ஆம் பிரிவை திருத்தி சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட வரைவில் அரசாங்க வர்த்தமானி யில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் வரைவினை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.