2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
101 "செமட்ட செவன" புதிய மாதிரி கிராமங்களை வீட்டு பயனாளிகளுக்கு உரித்தளித்தல் - 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்த "செமட்ட செவன" தேசிய வீடமைப்பு முனைப்பின் பிரதான அபிவிருத்தி முன்னெடுப்புகளில் ஒன்று மாதிரி கிராம நிகழ்ச்சித்திட்டமாகும். கூறப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், குடியிருப்பொன்றின் தேவையான சகல வசதிகளுடனும் வீட்டு பயனாளிகளுக்கு உரித்தளிக்கப்பட்ட மாதிரி கிராமங்களின் எண்ணிகை 286 ஆகும். அத்துடன் ஒக்றோபர் மாதம் 07 ஆம் திகதி முன்னர் வரும் உலக வாழிட தினத்தை முன்னிட்டு, செப்ரெம்பர் 23 ஆம் திகதியிலிருந்து ஒக்றோபர் மாதம் 07 ஆம் திகதி வரையான இரு (02) வார காலப்பகுதியில், கூறப்பட்ட எண்ணிகையில் 101 மாதிரி கிராமங்களின் உரிமைத்துவமானது தமது சொந்த வீடொன்றின் உரிமைத்துவத்திற்காக காத்திருக்கும் பயனாளிகளுக்கு உரித்தளிக்கப்படுமென்று அமைச்சரவையின் தகவலுக்காக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் செய்யப்பட்ட முன்வைப்பு அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |