2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக செயல்திறன்மிக்க சட்டரீதியான கட்டமைப்பொன்றை அறிமுகம் செய்தல் - பயங்கரவாதத்தின் புதிய பரிமாணத்தினை கையாளும் பொருட்டு தற்காலிக மட்டுப்படுத்தல் கட்டளைகள், பல்வேறு வழிகளில் பயங்கரவாதத்தினை ஊக்குவிப்பதை தடைசெய்தல் மற்றும் குறிப்பிட்ட விசேட வௌிநாட்டு பிரிவுகளில் இருப்பதை கட்டுப்படுத்தல் அத்துடன் ஆயளவை தரவுகளை சேகரித்தல் போன்ற துறைகள் தொடர்பில் புதிய சட்டங்கள் தேவைப்படுகின்றன. அதற்கிணங்க, இந்த நோக்கத்திற்காக சிபாரிசுகளை வழங்குவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட அமைச்சுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைவாக நடைமுறையிலுள்ள சட்டத்திற்கான திருத்த சட்டத்தினை வரையும்படி அல்லது பொருத்தமான புதிய சட்டத்தினை வரையும்படி சட்டவரைநருக்கு அறிவுறுத்துமாறு மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|