2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஐரோப்பிய ஒன்றிய மானிய உதவித் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படவுள்ள இலங்கையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கும் கருத்திட்டம் மற்றும் இலங்கையில் தேசிய ரீதியாக தீர்மானிக்கப்பட்ட கைத்தொழில் துறையின் பங்களிப்பு கருத்திட்டம் - இலங்கையில் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்திக்கும் சனநாயக நிருவாகத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் ஒத்துழைப்பு நல்கும் நோக்கில் 'இலங்கைக்கான பல்வருட குறியீட்டு நிகழ்ச்சித்திட்டம் - 2014-2020' ஐரோப்பிய ஒன்றிய மானிய உதவித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்கீழ் ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள 110 மில்லியன் யூரோக்களை 'இலங்கையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர மேம்பாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கும் கருத்திட்டம்' மற்றும் 'இலங்கையில் தேசிய ரீதியாக தீர்மானிக்கப்பட்ட கைத்தொழில் துறையின் பங்களிப்பு கருத்திட்டம்' ஆகிய கருத்திட்டங்களுக்கு முறையே 11 மில்லியன் யூரோக்களும் 7.81 மில்லியன் யூரோக்களும் கொண்ட மானிய உதவித் திட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் மானிய உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |