• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தற்காலிக, அமய (நாட் சம்பளம்), பதிலீட்டு, ஒப்பந்த அல்லது விடுவிப்பு அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குதல்
- 25/2014 ஆம் 25/2014(I) ஆம் இலக்கங்களைக் கொண்ட அரசாங்க நிருவாக சுற்றறிக்கைகள் வௌியிடப்பட்ட சந்தர்ப்பங்களில் இந்த சுற்றறிக்கையின் மூலம் கோரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யாமையினால் சேவையில் நிரந்தரமாக்க முடியாமற் போன ஊழியர்க ளையும் அதேபோன்று சுற்றறிக்கைகள் வௌியிடப்பட்டதன் பின்னர், சேவையின் தேவை நிமித்தம் அரசாங்க நிறுவனங்களில் ஆரம்ப தரங்களைச் சேர்ந்த பதவிகளுக்கு தற்காலிக, அமய (நாட் சம்பளம்), பதிலீட்டு, ஒப்பந்த அல்லது விடுவிப்பு அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு 180 நாட்களுக்கு மேலாக சேவையாற்றியுள்ள ஊழியர்கள் தேவையான தகைமைகளை 2019 09 01 ஆம் திகதியன்றுக்கு பூர்த்தி செய்ததன் மீது குறித்த பதவிகளில் நிரந்தர ஓய்வூதியம் உரித்துடைய நியமனங்களை வழங்கும் பொருட்டு உரிய சுற்றறிக்கை ஏற்பாடுகளை அமுல்படுத்தும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் நிதி அமைச்சரினாலும் பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.