• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை தினத்திற்கு ஒருங்கிணைவாக "தகவல் மாதத்தினை" பிரகடனப்படுத்தல்
- 2016 ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகாரிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைச்சட்டம் தற்போது உலகில் சிறந்த நான்காவது சட்டமாக தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, இந்த தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அடிப்படை பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ள ஊடக அமைச்சினால் இதனை முனைப்பாக அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கிணங்க, 2019 செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதியன்றில் வரும் 'தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை சருவதேச தினத்திற்கு' ஒருங்கிணைவாக 2019 செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 2019 ஒக்ரோபர் மாதம் 15 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியை "தகவல் மாதமாக" பிரகடனப்படுத்துவதற்கும் இந்த மாதத்தினுள் இந்த சட்டம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்க நிறுவனங்கள் யாவற்றுக்கும் அறிவுறுத்துவதற்கு சுற்றறிக்கையொன்றை வௌியிடுவதற்கும் இதற்கு ஒருங்கிணைவாக நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவற்றையும் தழுவும் விதத்தில் சிவில் பிரசைகளுக்கு அறியச் செய்விக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கும் 'கிராமத்துக்கு தகவல் அறியும் உரிமை' என்னும் தலைப்பில் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை பற்றிய நடமாடும் சேவைகளை ஐந்து மாவட்டங்களை தெரிவு செய்து நடைமுறைப் படுத்துவதற்குமாக வெகுசன ஊடக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.