• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலர் வலய அபிவிருத்தி கருத்திட்டம்
- உலர் வலய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாம் கட்டமாக அநுராதபுர மாவட்ட உலர் வலய அபிவிருத்தி கருத்திட்டத்தை அநுராதபுர மாவட்டத்தினுள் 331 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டின் மீது 2019 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கும், அதன் கீழ் விவசாயக் கிணறுகளை அபிவிருத்தி செய்தல், விவசாய பாதைகளை புனரமைத்தல், பயனாளிகளுக்கு கமத்தொழில் கருவிகளை விநியோகித்தல், சமூக நிலையங்களை நிர்மாணித்தல் போன்ற நோக்கங்களுக்காக 204 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டின் மீது நிறைவேற்றுவதற்கும் சுத்தமான குடிநீர் விநியோகம், குடிசை / சிறிய கைத்தொழில் அபிவிருத்தி உட்பட விருத்தி செய்தல், பயிற்சி மற்றும் அறிவூட்டல், கமத்தொழில் விளைவுப் பெருக்க அபிவிருத்தி ஆகிய நோக்கங்களை 127 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டின் மீது நிறைவேற்றுவதற்குமாக மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.