2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தண்டப்பணத்தை அதிகரித்தல் - (1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணைச் சட்டம்) - சில சட்டங்களிலும் கட்டளைச் சட்டங்களிலும் உள்ள ஏற்பாடுகளை மீறுதல் தொடர்பில் விதிக்கப்படும் தண்டப்பணங்களானவை அத்தகைய மீறல்களை தடுப்பதற்கு முழுமையாக போதுமானவையல்ல என்பதனால் இந்த நிலைமையினை ஆராய்வது மற்றும் பொருத்தமானவிடத்து கூறப்பட்ட தண்டப்பணங்களை அதிகரிப்பது தொடர்பில் சிபாரிசுகளை செய்வ தற்கு அப்போதைய நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதற்கிணங்க, கூறப்பட்ட குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளுக்கிணங்க பிணைச் சட்டத்திலுள்ள தண்டப்பணங்களை அதிகரிப்பதற்கான சட்டத்தினை வரையுமாறு சட்டவரைநருக்கு அறிவுத்தும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் செய்யப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |