2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவுக்கான கட்டடத்தை நிர்மாணித்தல் - கடந்த ஆண்டுகளில் வௌிநோயாளர் சிகிச்சை சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் அதிகரித்துவரும் கேள்வி காரணமாக களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவின் தற்போதுள்ள இடவசதி போதுமானதாக இல்லையென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவுக்கான கட்டடத்தை நிர்மாணிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |