• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலைமாற்றம், நல்லிணக்கம் மற்றும் பரிபூரண சனநாயக செயற்பாட்டினை வலுவூட்டும் கருத்திட்டம்
- வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் பன்முகப்படுத்தப்பட்ட நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு,மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான கலந்துரையாடலை பலப்படுத்தல், இதன் மூலம் பிணக்குகளுக்கு தாக்கத்தை செலுத்தும் உள்ளக ரீதியிலான காரணங்களுக்கு மாற்று வழிகளை எடுத்தல், பிரதேச ரீதியிலான மோதல்களை தடுத்தல் போன்ற அடிப்படை நோக்கங்களுடன் "நிலைமாற்றம், நல்லிணக்கம் மற்றும் பரிபூரண சனநாயக செயற்பாட்டினை வலுவூட்டும் கருத்திட்டம்" என்னும் பெயரில் கருத்திட்ட மொன்று உலக வங்கியின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினதும் பிரிட்டிஷ் கவுன்சிலினதும் மறைமுக முகாமைத் துவத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த கருத்திட்டத்திற்கு நிதியிடுவ தற்காக 40 மில்லியன் யூரோக்களைக் கொண்ட மானியமொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் மானிய உடன்படிக்கையொன்றை செய்துகொள்ளும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.