2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய நிலைபேறான அபிவிருத்தி கொள்கை மற்றும் திறமுறை - ஒரு நாட்டின் அபிவிருத்தியின்பால் நிலைபேறுடைய அபிவிருத்தி நோக்கங்களை வெற்றிகொள்ளும் முக்கியத்துவமும் நிலைபேறான அபிவிருத்தியைக் கொண்ட உலகமொன்றை நிர்மாணிப்பதற்கு உலகளாவிய ரீதியிலான முயற்சிகளுக்கு எங்களால் வழங்கப்படும் அர்ப்பணிப்பும், அரசாங்க அமைப்புகள் யாவும் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக செயலாற்றுவதும் அவசியமான தென்பதனை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சகல அமைச்சுக்களினதும் பொது நோக்காக "நிலைபேறாக அபிவிருத்தியடைந்த இலங்கை" என்பதனை பயன்படுத்துவதற்கும் மாகாண சபை ஒவ்வொன்றினதும் நோக்காக "நிலைபேறாக அபிவிருத்தியடைந்த இலங்கைக்கு நிலைபேறாக அபிவிருத்தியடைந்த ............ (உரிய மாகாணத்தின் பெயர்) மாகாணம்" என்பதனை பயன்படுத்துவதற்கும் சகல அமைச்சுக்களும் நிலைபேறான அபிவிருத்தி நோக்கத்திற்கு முன்னுரிமையளித்து மக்கள் சேவையினை வழங்கும் திறமுறையினை தயாரிப்பதற்கும் அரசாங்க நிறுவனங்கள் யாவும் இவ்வாறு இனங்காணப்பட்ட திறமுறையின் கீழ் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை அடையாளப்படுத்துவதற்கும் நிலைபேறுடைய அபிவிருத்தி சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட நிலைபேறுடைய அபிவிருத்தி சபையானது நிலைபேறுடைய அபிவிருத்தி சம்பந்தமான தேசிய கொள்கை மற்றும் திறமுறையினைத் தயாரிப்பதற்கும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |