2019-09-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை தேசிய நிலைபேறான அபிவிருத்தி நோக்கு - 2030 (விடய இல.06) - அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்ட 41 நிபுணர்களைக் கொண்ட குழுவினால் "இலங்கை தேசிய நிலைபேறான அபிவிருத்தி நோக்கு - 2030 மற்றும் திறமுறை பாதை" என்னும் பெயரில் தயாரித்து நிலைபேறான அபிவிருத்தி சபைக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை எதிர்காலத்தில் நிலைபேறுடைய அபிவிருத்தி பற்றிய தேசிய கொள்கை மற்றும் திறமுறையினை தயாரிக்கும் போது திறமுறை வழிகாட் டலாக பயன்படுத்தப்படும். நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்கு மற்றும் நோக்கங்கள் சார்ந்த தேசிய கொள்கை மற்றும் திறமுறை தயாரிக்கப்படும் வரை 2020 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்திற்கான பிரேரிப்புகள் அமைச்சுக்களினால் சமர்ப்பிக்கப்படும்போது மேற்போந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ள துறைசார் முன்னுரிமைகள், புதிய ஆரம்பங்கள் மற்றும் மாற்று வழிகள் என்பவற்றின் ஊடாக நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்து வதற்கான பிரேரிப்புகளை சமர்ப்பிப்பது பொருத்தமானதென அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசானது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |