2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பங்களாதேஷ் அவசர வௌ்ள நிவாரணத்திற்காக அடையாள பங்களிப்பு - இந்த ஆண்டின் யூலை மாதத்திலிருந்து பங்களாதேஷில் பெய்து வரும் அடைமழை காரணமாக உருவாகியுள்ள கடும் வௌ்ளப்பெருக்கு நிலைமையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பங்களாதேஷ் மக்கள் குடியரசுக்கு அவசர வௌ்ள நிவாரணமாக 50,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களை நன்கொடையாக அளிக்கும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |