• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணாமற்போனமைக்கான சான்றிதழை பெற்றுள்ளவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குதல்
- காணாமற்போனமைக்கான சான்றிதழை கொண்டுள்ள பயனாளிகளுக்கு 2019 ஒக்ரோபர் மாதம் 10 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் 10 ஆம் நாள் நேரடி பண வைப்பின் மூலம் மாதாந்தம் 6,000 ரூபா வீதம் இடைக்கால நிவாரணத்தினை வழங்குவதற்கும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் சார்பில் காணாமற்போனமைக்கான சான்றிதழை வழங்குமாறு பதிவாளர் அதிபதி திணைக்களத்திற்கு பணிப்பு விடுப்பதற்குமாக நிதி அமைச்சரினாலும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.