• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பங்குச் சந்தையினால் விதித்துரைக்கப்பட்டுள்ள பொது பங்கு பரிவர்தனையின் ஆகக்குறைந்த எல்லை 10 சதவீதம் என்னும் தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்கு இலங்கை ரெலிகொம் பங்குகளில் அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் மற்றும் பங்களிப்பு நிதியத்தின் மூலம் முதலீடு செய்து அதன் மூலம் இலங்கை ரெலிகொம் கம்பனியின் அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்குரிமைகளை பலப்படுத்தும் பிரேரிப்பு
- இலங்கை ரெலிகொம் பிஎல்சீ கம்பனி அரசாங்கத்திற்கு சொந்தமான பிற தொழில்முயற்சிகள் மற்றும் பங்களிப்பு முதலீட்டு நிதி மூலம் 52.92 சதவீத பங்குகளின் உரிமைகளை நிர்வகிக்கும் மற்றும் 2.1 சதவீத பங்குகளின் உரிமை பொது மக்களுக்கு சொந்தமான நாட்டிலுள்ள முதன்மையான தொலைத்தொடர்பாடல் சேவையை வழங்குகின்றது. இலங்கை பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஒழுங்குவிதிக்கு அமைவாக பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் "பொது பங்கு பரிவர்தனையின் ஆகக்குறைந்த எல்லை 10 சதவீதம் என்னும் தேவைப்பாட்டை இலங்கை ரெலிகொம் நிறுவனத்தினால் பூர்த்தி செய்யக்கூடிய விதத்தில் ஊழியர் சேமலாப நிதியம், வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், மக்கள் வங்கி ஆகிய அரசாங்கத்திற்கு சொந்தமான தொழில்முயற்சிகளுக்கும் பங்களிப்பு நிதியங்களுக்கும் அவற்றின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தின் கீழ் இலங்கை ரெலிகொம் பிஎல்சீ கம்பனியின் மூலதன பங்குகளில் முதலீடு செய்வதற்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி அமைச்சரினாலும் தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.