• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தரம் 5 புலமைப்பரிசில்தாரர்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறையினை மறுசீரமைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் அதிகமானோருக்கு இரண்டாம் நிலை கல்வி வசதிகளை வழங்குதல்
- தற்போது தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தகமைபெறும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 15,000 பிள்ளைகளுக்கு அரசாங்கத்தினால் வருடாந்தம் சுமார் 625 மில்லியன் ரூபா புலமைப்பரிசிலாக வழங்கப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டிலிருந்து இந்த எண்ணிக்கையை 20,000 வரை அதிகரித்தல் அவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை 500 ரூபாவிலிருந்து 750 ரூபா வரை அதிகரித்தல், 2019 ஆம் ஆண்டிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் குடும்பங்களில் புலமைப்பரிசிலை பெற்றுக் கொள்வதற்கான தகமை பெறும் மாதாந்த வருமான எல்லையை 15,000 ரூபாவாக திருத்துவதற்கும் சகல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 20,000 விஞ்சாதவாறு பரீட்சைகள் திணைக்களத்தினால் சிபாரிசு செய்யப்படும் விசேட தேவைகளுடன் கூடிய பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் குறித்தொதுக்குதல் போன்ற பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டு கல்வி அமைச்சரினால் அமைச்சரவை அறிந்து கொள்ளும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குறிப்பானது அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.