2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
'பசுமை பூங்கா' என்னும் வரவுசெலவுத்திட்ட தலைப்பின் கீழ் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு தேசிய வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட பொது திறைசேரி நிதி ஏற்பாட்டினை பயன்படுத்தி அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - 'பசுமை பூங்கா' என்னும் வரவுசெலவுத்திட்ட தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாட்டினை பயன்படுத்தி அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது இதன் கீழ் புத்தளம் மற்றும் பலாங்கொடை ஆகிய புதிய கருத்திட்டங்களையும் 19 கருத்திட்டங்களின் மீதி வேலைகளான பிள்ளைகளின் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்களை வழங்குதல், பொருத்துதல் மற்றும் காணி அழகுபடுத்தல் என்பவற்றை வரவுசெலவுத்திட்டத்தில் கிடைக்கக் கூடியதாகவுள்ள எல்லையினுள் மத்திய பொறியியல் சேவைகள் கம்பனிக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |