2019-09-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு தாமரைக் கோபுர கருத்திட்டம் - கொழும்பு தாமரைக் கோபுர கட்டடத் தொகுதிக்கான வர்த்தக செயற்பாடு - அண்மையில் கொழும்பு தாமரைக் கோபுர கருத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவிடம் கையளிக்கப் படவுள்ளது. இந்த கருத்திட்டத்தின் வசதிகளை இலங்கை மக்கள் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கும் அதேபோன்று அதனை வர்த்தக செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கும் துரிதமாக வர்த்தக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டியமையினால் இந்த பணிகளை முகாமிக்கும் பொருட்டு அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனியொன்றை தாபிப்பதற்காக பொதுத் திறைசேரிக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |