2019-08-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாலைதீவு அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திடுதல் - இலங்கையின் முதியோரின் சுதந்திரம், பாதுகாப்பு, பங்களிப்பு, மதிப்பளித்தல் என்பன பொருட்டு பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் அவர்கள் ஊக்குவித்தல், முதியோர்களை பாதுகாப்பதற்குத் தேவையான பங்களிப்பினை வழங்குதல், அங்கவீனமுற்றவர்களின் தொழில் ஆற்றலை விருத்தி செய்தல் மற்றும் அவர்களை சுயமாக செயற்படுபவர்களாக மாற்றுதல் போன்ற பணிகளை விளைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் செய்து கொள்வதற்கும் அதேபோன்று சிறுவர்களின், பெண்களின், முதியோர்களின் மற்றும் அங்கவீனமுற்றோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மாலைதீவு அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினைக் கைச்சாத்திடும் பொருட்டு ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |